சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Monday, July 20, 2020

ஒரு எழுத்தாளன் - -சு.ரா

ஒரு எழுத்தாளன் - -சு.ரா

ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசாங்கம், சமூகம், மதம், தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசம் அளித்து விடக் கூடாது என்பதை என் இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
வெகுஜனத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதோ, புதிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களை தூண்டுவதோ என்னுடைய வேலை அல்ல. அவர்களுடைய பொது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விதி விலக்கான உண்மைகளைச் சொல்லி, அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுடைய விரோதி யாகவும், காலத்தின் நண்பனாகவும் இருப்பதே என் வேலை என்று எண்ணுகிறேன்.
-சு.ரா



FB Comments
      • நேரடி பாதிப்பு என்னும் அளவில் இது புரிந்துகொள்ளக்கூடியதே . ஆனால் இலக்கியத்தின் influence மிக அரூபமானது .வெளிப்படையாக புலப்படாத சிந்தனை போக்கின் / நிலைப்பாடுகளின் தோற்றுவாயில் நகர்வுகளை ஏற்படுத்த வல்லது . நாம் பேரிலக்கியங்கள் என்று கருதுபவை எல்லாமே ஆழ்ந்த செல்வாக்கை இவ்விதம் இன்னும் செலுத்திக்கொண்டிருப்பவை தான்
        1
        • Like
        • Reply
        • 9w
    • Kay Vee
       இலக்கிய ஆக்கத்தில் வெளிப்படுவது எழுத்தாளனின் ஆழ்மனம் என்று கொண்டால், அதை அந்த எழுத்தாளன் நேரடியாக influence பண்ண முடியாது என்றுதான் கொள்ள வேண்டும். எனவே இங்கு சு.ரா சொல்லுவது இலக்கிய ஆக்கம் என்பதைவிட ஒரு எழுத்தாளனாக அவனின் சமூக செயல்பாடு, நிலைப்பாடு மற்றும் அவன் கருத்துக்கள் சார்ந்து கொள்ள வேண்டிய கவனம் என்றே கொள்கிறேன். இது பொதுவாக ஒரு எழுத்தாளன் கொள்ள வேண்டிய மனநிலை மற்றும் கட்டுரைகளில் அவன் எதை முன்வைக்க வேண்டும் என்பது சார்ந்து என்றே எடுத்துக்கொள்கிறேன், இலக்கிய ஆக்கத்தில் அல்ல.
      2
      • Like
      • Reply
      • 9w
  • Kay Vee
     மேலே சொன்னதை சொல்லும் சுரா , அதன் தொடர்சியாக இன்னொன்றும் சொல்கிறார். சுருக்கமாக அதை இப்படி சொல்கிறேன்....
    இந்திய-சீன போரின் போது .....
    -போருக்கு உகந்து இந்திய மக்களின் ஒற்றுமை உணர்ச்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக நினைக்கவில்லை என்கிறார், அது தனது வேலை இல்லை. அதை கவனிப்பது, தெரிந்து கொள்வது மட்டுமே தனது வேலை என்கிறார்.
    அதேசமயம்.
    - இந்தியாவில் பிறந்து வளர்ந்து வரும் சீனர்கள் என்ன விதமான சிரமங்களுக்குள் ஆளானார்கள் என்பதை பரிவுணர்சியுடன் கண்ணுற்று விவரிப்பதே ஒரு இலக்கியகர்த்தாவாக தனது தேவை என்கிறார்.
    ஆனால், அப்படி செய்து, அந்த பார்வையை ஏற்றுக்கொண்டு நம்மவர்கள் "இந்திய சீனர்களுடன்" ஒரு சகோரதத்துவம் கொண்டாட முற்படுவார்கள் எனில்,
    -"முழுக்க முழுக்க அவர்களை நம்புவது விவேகமல்ல" என்று சொல்ல ஆரம்பிப்பேன் என்கிறார்.
    🙂
    2
    • Like
    • Reply
    • 9w
    • Saravanan Vivekanandan
       மக்கள் குழப்பவாதி என்பார்கள் இல்லையா 
      😀
       . But I agree with this approach .Btw இது என்ன கட்டுரையா/ உரையா ?
      1
      • Like
      • Reply
      • 9w
      • Edited
  • குழப்பவாதி, நேரத்துக்கு ஏற்று பேசுபவன், நிலையற்றவன் என்பார்கள், ஆனால் சு.ரா இந்த "விசுவாசமற்ற தன்மை"யே எழுத்து சுதந்திரம் என்கிறார். ஆனால் எழுத்தாளரின் எதிரிகளுக்கு நல்ல வாய்ப்பு, இரண்டையும் எடுத்துப்போட்டு "முரண்பாட்டு மூடடை" என்று பேசலாம்....எல்லோரும் லைக் போடுவார்கள்
    😀
    1
    • Like
    • Reply
    • 9w
  • அப்ப மனுஷ்ய புத்திரன், இமயம், கண்மணிகுணசேகரன் எல்லாம் எழுத்தாளர்கள் இல்லைனு சொல்றீங்க !
    • Like
    • Reply
    • 9w
  • தனக்கு எது உண்மை னு படுதோ அல்லது யார் நிராதவரா நிற்கிறார்கள் என்று தோன்றுகிறதோ அவர்கள் பக்கம் நிற்பேன் மாதிரியான ஸ்டேட்மெண்ட் எல்லாம் ஓகே, மேலே கார்தீஜி சுரா சொல்வதாக வரும் வரிகள் எல்லாம் சும்மா ஒரு அறிவுஜீவி தெனாவெட்டு, அதுக்குமேல ஒன்னுமில்லை !
    3
    • Haha
    • Reply
    • 9w
  • Radha
     ராதா, சுரா வே இந்த definition குள்ள வரமாடடார்ன்னு அவரே சொல்கிறார். " மேலே சொன்னதை பின்பற்ற அவசியமான அளவு சத்திய உணர்வோ தைரியமோ எனக்கில்லை, எனினும் அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்றுதான் அவருக்கே சொல்லிக்கொள்கிறார்.
    😀
    • Like
    • Reply
    • 9w
  • Radha
     மற்றவர்கள் எதற்கு, வா நாம ஆரம்பிப்போம் ... இந்த கட்சிகள்.... அரசாங்கம்..... சமூகம்.... முக்கியமா மதம்..... தேசம் இவற்றுக்கான நமது விசுவாசத்தை துறந்தொழிப்போம் ... வர்றியா???? 
    😄
     
    😄
    • Like
    • Reply
    • 9w
    • Like
    • Reply
    • 9w
  • எதுக்கு துறக்கணும், bjp, காங்கரஸ் எல்லா வற்றையும் ஆதரிப்போம், எல்லா தேசமும் நம்ம தேசம்தான், எல்லா மதங்களும் நம்ம மதங்கள்தான் 
    🙂
    1
    • Like
    • Reply
    • 9w
  • ராதா 
    😊
    1
    • Like
    • ஆனால் இது எப்போதும் சிற்றிதழ் சார்ந்த சூழலில் இயங்கும் இலக்கியவாதிகள் கொள்ளும் மனநிலைதான்.... ஜெமோ கூட "மையப்பெரும்போக்குடன் முரண்படுவதே எழுத்தாளனாவதன் முதல்படி" என்கிறார்.
      • Like
      • Reply
      • 9w
  • //இலக்கிய ஆக்கத்தில் வெளிப்படுவது எழுத்தாளனின் ஆழ்மனம் என்று கொண்டால், அதை அந்த எழுத்தாளன் நேரடியாக influence பண்ண முடியாது என்றுதான் கொள்ள வேண்டும். //
    இதுவும் முக்கியமான பாயிண்ட் . வாசகபரப்பிலும் இது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன் .பல குழப்பங்கள் புனைவு வெளிப்பாட்டை one-to-one நிகர் வாழ்க்கைக்கு / சம காலத்துக்கும் பொறுத்திப்பார்க்கும் போக்கில் நிகழ்கிறது .ஆழ்மனம் என்பது மழைவெள்ளம் போல அனைத்தையும் இழுத்துக்கொண்டு பொங்கி புரண்டு வரும் ஒன்று , அதன் ஆற்றல் அதன் பலம் .அதன் போக்கில் வரலாற்று விசைகளில் அடித்துப்போகப்படுவது ஒரு அனுபவம் ஆனால் அதை குடிநீருக்கு பயன்படுத்துவேன் என்னும் போது ஒரு எளிய filtering process தேவைப்படுகிறது , அது வாசகனின் ஒரு பொறுப்பும் கூட என்று சொல்லலாம்.

    • இது "நானும் என் எழுத்தும்" என்று 1966 ல எழுதுன கட்டுரை
      1
      • Like
      • Reply
      • 9w
    • Saravanan Vivekanandan
       தம்பி நாரோயில ஸ்டாப்பிங் மாறி எறங்கிடுச்சு போல..
      1
      • Haha
      • Reply
      • 9w
  • அண்ணே, நாரோயில முதல்ல இறங்குனதே இந்த ஸ்டாப்பிங்ளதான், அப்பறம் இங்கிருந்து பொடி நடையாவே நடந்து பார்வதிபுரம் போயிட்டேன்... 
    😀
    3
    • Like
    • Reply
    • 9w
  • சு ரா கட்டுரைகள் 'ஆளுமைகள் மதிப்பீடுகள்' என்ற
    உன்னதமான அபுனைவு புத்தகத்தின் முன் உள் அட்டையில் முதலில் வாசித்தது.
    இதை வாசித்தபின்தான் புத்தகத்தை வாங்க முடிவே செய்தேன்.
    2
    • Like
    • Reply
    • 9w
  • ////இலக்கிய ஆக்கத்தில் வெளிப்படுவது எழுத்தாளனின் ஆழ்மனம்../இங்கே சொல்லப்படும் இந்த ஆழ்மனம் என்பதுதான் என்ன? மனசாட்சியா அல்லது பிராய்டிய உளப்பகுப்பாய்வில் வரும் ஈத் எனும் ஒன்றா?
    2
    • Like
    • Reply
    • 9w
    • பொதுவாக மனசாட்சி என்பது சூப்பர் ஈகோ வகைமையில் வருவது.
      3
      • Like
      • Reply
      • 9w
  • நம்பிக்கைகள் , விழுமியங்கள் , தேவைகள் , தேடல்கள் , அறில்கள் - இவற்றின் கலவையான வெளிப்பாட்டை ஆழ்மன வெளிப்பாடு எனலாம்
    இவை எவ்விதம் வெளிப்படுகிறது என்பதில்
    நிகழும் தனிப்பட்ட தேர்வே அழகியல் நோக்கு
    2
    • Like
    • Reply
    • 9w
  • I'll copy it thozhar
    1
    • Like
    • Reply
    • 9w
  • ஆம் 
    Kay Vee
     ஆழ்மனம் என்பதை ஒரு ஏரியின் அடிப்பரப்பாய் உருவகம் செய்துகொள்கிறேன். அதில் எல்லாமே இருக்கும், அந்த வாழ்க்கையில் அது கண்டது, கேட்டது, கற்றது, அதை வந்தடைந்தது, அது கடந்தது என்று எல்லாமே அதற்கான பல்வேறு உணர்சசிகளோடு பொருந்தி மனதின் அடியில் விழுந்துவிடுகிறது... அனுபவங்களாக நினைவுகளாக படிந்து விடுகிறது... அது அந்த ஏரியே அறியாதது. அது சார்ந்த எந்த தன்னுணர்வும் அதற்க்கு இல்லாமல் இருக்கலாம். ஒவ்வொன்றுக்கும் தனிப்படட வகையில் எந்த முக்கியத்துவமும் இல்லாமலும் இருக்கலாம்... ஆனால் எதோ ஒன்றின் தூண்டுதலில், ஒரு நீர் சுழற்சியில் இது எல்லாம் எதோ ஒரு நூலிழையில் தொடர்புபடுத்தப்பட்டு ஒரு புள்ளியில் சுழன்று மேலெழுகிறது.... அந்த நீர்ச்சுழற்சியை படைப்பூக்க மனநிலை என்றும், எழுத்தாளனின் அந்த வெளிப்பாட்டு முனைதான் இலக்கியமாகிறது என்றும் கொள்கிறேன்.
    1
    • Like
    • Reply
    • 9w
    • Edited
  • நல்லா சொழட்டி சொழட்டி எழுத பழகிகிட்டீங்கய்யா எல்லோரும்...
    4
    • Haha
    • Reply
    • 9w
    • இவனுக்குள்ளயும் இருந்துருக்கு பாருங்க சார்.
      2
      • Haha
      • Reply
      • 9w
  • அதானே...
    1
    • Haha
    • Reply
    • 9w
  • அடுத்து உபன்யாசம் பண்ண கிளம்பலாமான்னு இருக்கேன்... 
    😀
    1
    • Like
    • Reply
    • 9w
  • Saravanan Vivekanandan
     இதெல்லாம் சகவாச தோஷம்.
    சேர்க்கை சரியில்லேன்னு தோணுது...… 
    See More
    1
    • Haha
    • Reply
    • 9w
  • முன்பு முற்போக்கினர் சொல்லி நான் கேட்டதை எல்லாம் இன்று உபன்யாசகர்கள் சொல்லிக் கேட்கிறேன். காலம் மாறிபோச்சு வி.ரா... நாமலும் மாற வேண்டியதுதான்... 
    😀
    2
    • Like
    • Reply
    • 9w
  • Saravanan Vivekanandan
     அதுவுஞ்சரிதான்...
    😃
    1
    • Haha
    • Reply
    • 9w
    • Haha
    • Reply
    • 9w
  • Saravanan Vivekanandan
     உபன்யாசகர்களில் கூட , சுகி.சிவம் மாதிரி ஆட்களெல்லாம் பேசக்கூடாது கேட்டுக்குங்க.
    1
    • Like
    • Reply
    • 9w
  • அதுவும் வாஸ்தவம்தான் பாலா...
    😀
    பாவம் அவரு ஒரு இடத்தில் ஒண்ண சொல்லிட்டு ஊரெல்லாம் வங்கிகட்டிகிட்டு, இப்ப விளக்கம் சொல்லி சொல்லி ஓய்ஞ்சுபொயிட்டாரு... 
    😱
  • Labels:

    Count The Moments
    Count The Moments

    0 Comments:

    Post a Comment

    << Home