சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Friday, February 19, 2010

முதற்கனவு ....

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
முதற் கனவு முதற் கனவு மூச்சுள்ளவரையிலும் வருமல்லவா
கனவுகள் தீர்ந்துபோனால் வாழ்வில்லை அல்லவா
கனவல்லவே கனவல்லவே கண்மணி நாமும் நிஜமல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா

எங்கே எங்கே......... நீ எங்கே என்று
காடு மேடு தேடி ஓடி இரு விழி தொலைத்துவிட்டேன்
இங்கே இங்கே நீ வருவாயென்று
சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர்வளர்த்தேன்
தொலைந்த என் கண்களை பாத்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்
இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ......
ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியினில் மடியினில் உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண போக்கள் வேர்க்குமுன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை.........
தாமரையே தாமரையே நீரினில் ஒளியாதே
நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரம் கொத்தியே மரம் கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்
குளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்...........தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்...
தூங்கும் காதல் எழுப்புவாய்.

Count The Moments
Count The Moments

ஆண்ட இனம் மாண்டழிந்த காலம் ......

மீண்டும் ..... மீண்டும்.... ஈழதினுள் நம்மை இழுத்துச் செல்லும் பாடல் .... ஆண்ட இனம் மாண்டழிந்த காலம் ... நாமெல்லாம் மௌன சாட்சிகளாக இங்கு ......
தொடங்கி ... தொடங்கி ... முடிந்த எல்லா வெற்றிகளும் "உன்னோடு" முடிந்துபோயினவா?

".......... தாழ்ந்தாலும்.... சந்ததிகள் வீழ்ந்தாலும்....
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்....."

"...... களங்களும் அதிர... களிறுகள் பிளிர.... ஈழம் (சோழம்) அழைத்துப் போவாயோ...?"

"தங்கமே என்னைத் தாய் மண்ணில் சேர்த்தால் புரவிகள் போலே புரண்டிருப்போம்.....
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை அருவிகள் போலே அழுதிருப்போம்...."

எப்படி ஒரு மிகப்பெரிய ஜனசமுத்திரத்தின் அத்தனை கனவுகளும்... ஏக்கங்களும் ... உன் ஒருவனை மட்டுமே மையம் கொண்டு பின்னப்பட்டது?
இன்று உன் ஒருவனுடைய அழிவு, எல்லா சாத்தியங்களையும், அபிலாசைகளையும் நிராசைகளாக ஆக்கிவிட்டு சென்றிருக்கிறது ...

இன்று எல்லாவற்றையும் தாண்டி எம்மக்கள் இழந்தது ....ஆயிரம் .... ஆயிரம்.... ஆயிரமாயிரம்.... பெற்றது என்ன?

..... நினைக்க... நினைக்க.... மேலும் மேலும் ஒரு முடிவில்லா சூனியத்திற்குள்லேயே செல்கிறது....மனம்.


பொம்மானே.. - ஆயிரத்தில் ஒருவன்


பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே என்புருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே

சோறில்லை சொட்டுமழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் உருவழிந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே


நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலும் சேறாகி போகமாட்டோம்
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல்கருதி நீ எம்தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்டஇனம் மாண்டழிய அருள்வாயோ...

Labels: ,

Count The Moments
Count The Moments

ஆயிரத்தில் ஒருவன்...ஈழம்... தாய் தின்ற மண்...

இப்பாடல் முழுக்க நேற்றைய / இன்றைய ஈழத்தமிழரின் அவலங்களை சோழர் காலத்தின் பின்னணியில் வடித்திருக்கிறது ... கண்மூடி கேட்கையில், மனம் முழுவதும் அவர்களே இருக்கிறார்கள்.

படம் : ஆயிரத்தில் ஒருவன்
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து
இசை : ஜீ.வி.பிரகாஷ்குமார்

தாய் தின்ற மண்ணே...
இது பிள்ளையின் கதறல்.
ஒரு பேரரசன் புலம்பல்...!
தாய் தின்ற மண்ணே...
பிள்ளையின் கதறல்.
ஒரு பேரரசு புலம்பல்...!

நெல்லாடிய நிலமெங்கே...?
சொல்லாடிய அவையெங்கே...?
வில்லாடிய களமெங்கே...?
கல்லாடிய சிலையெங்கே...?
தாய் தின்ற மண்ணே...!!!

கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்...!

காவிரி மலரின் கடி மணம் தேடி
கருகி முடிந்தது நாசி..!

சிலை வடிமேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்..!

ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்..!

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொறிப்பதுவோ..?

காற்றைக் குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ..?

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ..?

மன்னன் ஆளுவதோ..?

தாய் தின்ற மண்ணே..!!
தாய் தின்ற மண்ணே..!!
நொறுங்கும் உடல்கள்..
பிதுங்கும் உயிர்கள்..
அழுகும் நாடு..
அழுகின்ற அரசன்..

பழம் தின்னும் கிளியோ..
பிணம் தின்னும் கழுகோ..

தூதோமுன் வினைத் தீதோ..

களங்களும் அதிர
களிறுகள் பிளிர

சோழம் அழைத்துப்
போவாயோ...?

தங்கமே என்னைத்
தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே
புரண்டிருப்போம்

ஆயிரம் ஆண்டுகள்
சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே
அழுதிருப்போம்

அதுவரை...
அதுவரை...

தமிழர் காணும் துயரம் கண்டு
தலையைச் சுற்றும் கோளே...
அழாதே!

என்றோ ஒருநாள் விடியும் என்று
இரவைச் சுமக்கும் நாளே...
அழாதே!

நூற்றாண்டுகளின் துருவைத் தாங்கி
உறையில் தூங்கும் வாளே...
அழாதே!

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடு அழுகும் யாழே...
அழாதே...!

நெல்லாடிய நிலமெங்கே...?
சொல்லாடிய அவையெங்கே...?
வில்லாடிய களமெங்கே...?
கல்லாடிய சிலையெங்கே...?
தாய் தின்ற மண்ணே...!!!
இது பிள்ளையின் கதறல்.
ஒரு பேரரசு புலம்பல்...!

Count The Moments
Count The Moments

Wednesday, May 02, 2007

நடிகர் பார்திபனின் பேட்டி-சன் டிவி




மே 1, உழைப்பாளர்கள் தினம்,

சன் டிவியில் காலையில் நடிகர் பார்திபனின் பேட்டி பார்த்தேன். அவர் பேசியதில் இரண்டு கருத்துக்கள் மனம் தொட்டன. ஒருநாள் தங்கர்பச்சனுடன் காரில் போய்கொண்டு இருந்தபொது தெருஒரத்தில் திருட்டு விசிடி விற்பனையை பார்த்து தங்கர்பச்சன் கோபபட்டபோது, இது போன்ற சிறுவியாபாரிகளை விட இதன் அடிவேரை சாய்ப்பதில்தான் திருட்டு விசிடிக்கு முற்றுபுள்ளி வைக்கலாம் என்றாராம். அது போல அவர் சொன்ன மற்றொரு விஷயம், சமுக சேவைக்கு ஒவ்வொரு மனிதனும் ஒரு ஜோல்னா பையை மாட்டிகொண்டோ அல்லது ஒரு இயக்கத்திலோ சேர வேண்டிய கட்டாயம் இல்லை, மனம் கொண்டு அவர் அவர் விரும்பும் காரியத்தை சமுதாயத்திற்கு செய்தாலே போதும் என்பது தான்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் இணையம் மூலமாகவே பல புதிய திரைபடங்களை பார்த்து முடித்துவிடுவது மட்டும் இன்றி அவ்ற்றை சீடிக்களிள் வெறு பதிவு செய்து எப்போது வேண்டும் என்றாலும் பார்த்து ரசிக்கிறார்கள்.

ஆனால் தமி்ழ்நாட்டில் வாழும் ஏழை ரசிகர்கள், பெரும்பாலும் தெருவோரம் வாழ் மக்கள் கூட தங்களாள் முடிந்த விலை கொடுத்து பென்ச் சீட்டாவது வாங்கி பார்க்கிறார்கள். இதில் உண்மையை யோசித்து பார்த்தால் ஹொம் தியேட்டர், இணைய வசதி அல்லது அலுவலகத்தில் பெரிதும் கணினியை பயன்படுத்தும் மேல்தட்டு படித்தவர்களே இது போன்று சட்டவிரோதமாக திரைபடம் பார்க்கிறார்கள்.

எவ்வளவோ செலவு செய்யும் நாம், திரைஉலகம் நல்ல படங்கள் கொடுப்பது இல்லை என்று வருந்தும் நாம், ஏன் மொழி, பருத்திவீரன்,வெயில் போன்ற சில நல்ல படங்களையாவது தியேட்டருக்கு சென்று பார்க்களாமே. தியேட்டருக்கு போக விரும்பாதவர்கள் வீசிடி விலை கொடுத்து வாங்கிபார்க்களாமே. இது போன்ற சில நல்லதுகளை நாம் செய்வதே, நாம் சமுதயதிற்கு செய்யும் சீரிய நன்மை. வாழ்நாளில் ஏதாவது ஒரு நன்மை செய்ய நம் உள்ளம் விரும்பியிருக்கும். அது ஏன் இது போன்ற நம் மனசுக்கு அறிந்த, சில தவறுகளை தவிர்த்து தொடங்ககூடாது.?

யோசித்து பார்த்தால் நாம் ஏல்லோருமே வேலை வாய்ப்பு தேடியதுண்டு. ஏதோ நிதி பற்றாக்குறையால் வேலை கிடைக்காமல் போனால் நாமும் நம் குடும்பமும் எவ்வளவு வருந்துவோம். ஆது போலதான் நாமும் திரைபடங்களை சட்டவிரோதமக பார்ப்பதால் ஏதோ சிலகுடும்பங்களின் நல்வாழ்வை அறிந்தோ அறியாமலோ நாம் பாதிக்கிறோம்.

திரு.பார்த்திபன் கூறியது போல் சமுக சேவை செய்ய பெரிதாக ஒன்றும் செய்ய வெண்டாம். சிறு சிறு முயற்ச்சிகளும் மனமும் இருந்தாலே பொதும்.... சேவை தொடங்கும்.

Count The Moments
Count The Moments

Wednesday, June 08, 2005

தோழியாய் தொடற்வாயோ? ...

தோழியாய் தொடற்வாயோ?
இல்லை...
தோன்றிய வழி என் மனதில் அழிவாயோ?

உருக்கொண்டுயற என் மனதில்,
உன்மத்தம் உனக்கா... எனக்கா...?
உயிர் வாட செய்தவள் நீ...
நீ இன்றி யாது செய்யும் என் உலகம் ...?

உன் எதிரில் என் மனம் கிழிபடும் வாழையா?
கிழிந்த தென்னை ஓலையா?

உன் உயிரில் நான் இருப்பேன் என்ற நம்பிக்கையில்...
போய் வருகிறேன்...

என்றோ ஒரு நாள் இந்த பூமி பந்தின் ஏகாந்த வேளையில்
நம் சந்திப்பு நிகழும் ...

புதிய அலங்காரங்களோடு நாம்
முகமன் படுத்திக்கொள்வோம்

அன்றும் உனக்கான கேள்விகள்
என்னுள் தொக்கி நிற்க்கும்


நீயும் என்னை காதலித்தாயா?


Singasaran

Count The Moments
Count The Moments

Monday, May 30, 2005

அந்த பக்கத்து வீட்டு பெண்...


பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்Posted by Hello

Count The Moments
Count The Moments

பயந்து...பயந்தே முடிந்துபோன வாழ்க்கை...


பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்Posted by Hello

Count The Moments
Count The Moments

வாழ்கையின் நம்பிக்கை...


பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும் Posted by Hello

Count The Moments
Count The Moments

Tuesday, May 24, 2005

I Am...

I’m the lesson that can’t be understood without experience.

I’m the lesson that can’t be understoodby experience alone.

I enter every heart as a parent,sibling, lover, friend,

mentor,eye-opener, well-wisher and relative.Some recognize me,

some ignore me.I’m the God.I’m the life sustaining force.

Death is not for me.I make life as a blessing.

I bring civilization to human community.

I differentiate man & machine and animal.

Animal instinct ends at my light.

Divine instinct evolves in my presence.



I’m sun in the day

I’m moon in the night

Sleep is not for me

My waves are in constant search

Roaming and tossing

To touch the feet of infinity


Some Victories...

Some Defeats...

Some Meeting...

Some Parting...

Unknowing destination...

Unknowing termination ...

The JOURNEY continues...

Count The Moments
Count The Moments