சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Saturday, January 31, 2026

பகுத்தறிவாளர்களின் பாரம்: ஏன் உண்மைகள் இன்று தோற்கடிக்கப்படுகின்றன?




உலகமே ஏதோ ஒரு புள்ளியில் தோற்றுக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல், நாம் செய்யும் காரியங்கள் நமக்குப் பலன் தருவதற்குப் பதிலாக, அவர்களுக்கு (எதிர்தரப்பிற்கு) சாதகமாகவே முடிகின்றன, we don't know what to do, so we do what we can do but it doesn't help us but help them....



கடந்த காலங்களில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு இடதுசாரிகளே, rationalists தலைமை தாங்கினார்கள். இன்றும் அதே கடமை உணர்வுடன் அவர்கள் களமிறங்குகிறார்கள். ஆனால், இன்றைய அரசியல் சதுரங்கத்தில் விளையாட அவர்கள் தகுதியற்றவர்களாகி விட்டார்கள் என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள். இது காந்தி வாழ்ந்த உலகமல்ல. ஏன், நாம் பதின்பருவத்தில் பார்த்த உலகம் கூட இதுவல்ல. இடைவிடாத பொய்ப் பிரச்சாரங்களிலிருந்தும், தர்க்கமற்ற முழக்கங்களிலிருந்தும் நமது 'மன நலனைப்' (Sanity) பாதுகாப்பதே இன்று பெரும் சவாலாக உள்ளது.

1. உணர்ச்சி Vs தர்க்கம்: சமமற்றப் போர்

மனிதர்கள் அடிப்படையில் உணர்ச்சிமயமானவர்கள், அதன் பிறகே பகுத்தறிவு வேலை செய்கிறது. உண்மையை விடவும் உணர்ச்சிகள் வேகமாகப் பரவுகின்றன.

  • அவர்களின் ஆயுதம்: கதைகள், உணர்ச்சிகள் மற்றும் இடைவிடாத சலிக்காத ஒரே பாட்டு,  Repetition
  • நமது ஆயுதம்: தரவுகள், எண்கள் மற்றும் தர்க்கம்.


ஒரு அறிவியலளானாக என்னால் உண்மையை உணர்ச்சிமயமாக சொல்ல முடியாது, சொல்லக் கூடாது என்பதும் என் எண்ணம். எனது பேச்சுகளில் இருந்து உணர்ச்சிகளை வலுக்கட்டாயமாக வெளியே நிறுத்திவிட்டுதான் பேசுகிறேன். உணர்ச்சிகளை உண்மையில் கலப்பது மக்களைத் திசைதிருப்பும் யுக்தி. அப்படிச் செய்வது ஒருவிதமான குற்றவுணர்வைத் தருகிறது. ஆனால், அவர்களுக்கு அதுதான் பிரதான கருவி.

2. மாறிய ஆட்டமும் மாறாத விதிகளும்


கடந்த காலத்தில் "ஒருவர் தவறு செய்தால், அவரிடம் உண்மையைச் சொன்னால் அவர் தன்னைத் திருத்திக் கொள்வார்" என்ற விதி இருந்தது. இது அறிவியல், தொழில்நுட்பம்,   மருத்துவம் துறைகளில் வேலை செய்யும். ஆனால் இன்றைய அரசியலில் இது செல்லாது.

நாம் உண்மையை ஆதாரத்துடன் முன்வைக்கும்போது, அவர்கள் அதை தங்கள் மீதான தாக்குதல் என்று எண்ணி தற்காப்பு நிலைக்குச் செல்கிறார்கள். விளைவாக, அவர்கள் திருந்துவதற்குப் பதிலாக, இன்னும் தீவிரமாகத் தங்கள் தவறான நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார்கள். ஒருவகையில், நமது உண்மைகள் அவர்களை இன்னும் பலப்படுத்துகின்றன. இது ஒரு 'Autoimmune Disorder போன்றது. நமது சொந்த ஆயுதமே நம்மை அழிக்கிறது.


3. 'சிறிய உண்மை' என்னும் வலை

எந்தவொரு பெரிய பொய்யிலும் ஒரு சிறு துளி உண்மை கலந்திருக்கும். அந்தச் சிறு உண்மையை வைத்துக்கொண்டு அவர்கள் மொத்தப் பொய்க்கோட்டையையும் நியாயப்படுத்துகிறார்கள்.


உதாரணத்திற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) எடுத்துக் கொள்வோம். "வெளிப்படைத்தன்மை நிர்வாகத்தைச் சற்றுத் தாமதப்படுத்துகிறது" என்ற ஒரு சிறு உண்மையை மட்டும் பிடித்துக்கொண்டு, ஒட்டுமொத்த சட்டத்தையுமே முடக்குவதை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். நாம் அந்தத் தர்க்கப்பிழையைச் சுட்டிக்காட்ட முயலும்போது, பொதுமக்களின் செவிகளில் அவர்களது கதையே 50 முறை ஒலித்திருக்கும். இறுதியில் அவர்கள் வெல்கிறார்கள்.


4. களைப்புறுத்தல் உத்தி (Burnout Strategy)


அவர்களது வியூகம் மிக எளிதானது: ஒரு நாளைக்கு 20 பொய்களைப் பரப்புவார்கள். நாம் ஒவ்வொன்றாக 'Fact-check’ செய்து களைத்துப் போவோம். இறுதியில் நாம் சோர்ந்து விலகிவிடுவோம். ஆனால் அவர்கள் சோர்வடைய மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவமானம் என்பது கிடையாது. அவர்களுக்குத் தேவை இடைவிடாத குழப்பமும் சர்ச்சைகளும் மட்டுமே.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்களும் தர்க்கத்தை அவ்வப்போது பயன்படுத்துவார்கள். ஆனால் அது நம்மைச் சிக்க வைக்க மட்டுமே, they could easily win us with facts and logics… Because thats what we believe in …so it convinces us immediately. We are stunned. We immediatly go to introspective. 


Take the case of recent ICE agent killed a citizen, they argue “how come someone come out with loaded gun, If you go approach police with loaded gun they may feel threatened.  Why someone carry gun to peaceful protest?  These are the arguments of leftwing…. When the same arguments come from right wing… we stunned….

To convince someone about something like global warming might take an hour of explanation. But why do we explain the same thing for years … because  our tool fail us…

While we debate for years, with research, facts and figures, they simply keep producing new stories. But they can create one emotional story in 10 seconds.


பகுத்தறிவாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது: இந்த மேடையை விட்டு வெளியேறுங்கள். ஆட்டம் மாறிவிட்டது. நீங்கள் பழைய விதிகளை வைத்துக்கொண்டு புதிய ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறீர்கள். பலநூறு ஆண்டுகளாக உங்களுக்கு வெற்றியை கொடுத்துக்கொண்டிருந்தது எதுவோ அதுவே உங்களை வீழ்த்திக்கொண்டிருக்கிறது. இது உங்களுக்கான இடம் அல்ல.

Count The Moments
Count The Moments

"மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் Vs வெளிப்படையான ஊழல்: அறவீழ்ச்சியின் புதிய வடிவம்"





So many things happened are clear evidence that there is a dedicated team around Trump focused on identifying every possible earning opportunity and leveraging the presidency for maximum personal profit. In the past, there was a distance between politicians and lobbyists who wanted to act in favour of businessmen,  acted as intermediaries, try hard to reach politicians using different links and picture politicians that this is good for people and his presidency, and justify it and if succeed, taking their commissions quietly. Now that line disappeared…. The benefit flows directly and openly to the president himself and just to convince President that it it profitable for him is enough….


The troubling part is not the profit, but the normalization of it. In the past, even if politicians had personal interests, there was an expectation that they would maintain the appearance of public service and some boundaries for the sake of position he hold. Now, that restraint completely disappeared. It feels openly transactional…

இதில் இன்னொரு perspective உள்ளது. மக்கள் ஒருபோதும் அரசியல்வாதிகளை முழுமையாக நம்பியதில்லை. அவர்களின் ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் தனிப்பட்ட லாபம் ஒளிந்திருக்கும் என்ற சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்கள்   பொது நலனுக்கான ஒரு செயலையே செய்கிறார்கள் என்று சொன்னாலும், அது உண்மையாகவே இருந்தாலும், மக்கள் அதில் மறைமுக ஊழல் இருப்பதாகவே “கற்பிதம்” செய்துகொள்கின்றனர், அது அவர்களின் ஒரு உளவியல் தேவையாக இருக்கிறது. அவர்கள் அரசியல்வாதிகள் முற்றிலும் சுயநலமானவர்கள் என்று நம்முகிறார்கள், அதற்கு எதிரான எந்த ஒரு கருத்தும் அவர்களை பதட்டமடய செய்கிறது. ஏனெனில் அது அவர்கள் நம்பிக்கைக்கு எதிரானது. இதில் எந்த அரசியல்வாதி  எந்த ஆதரவாளர்கள் என்பது மட்டுமே மாறுகிறது,   அந்த “நம்பிக்கை இன்மை” என்ற அடிநாத எண்ணம் அல்லது அப்படி நம்ப வேண்டியதான் உளவியல் தேவையில் மாற்றம் இல்லை.

மக்களின் இந்த அவநம்பிக்கை, Cynicism ஒரு பெரிய செயலை இங்கு செய்கிறது.
 
"ஒபாமா அல்லது கிளிண்டன் எல்லாவற்றையும் சுயநலமின்றி செய்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் அதை மறைத்துச் செய்தார்கள். மற்றவர்கள் ரகசியமாகச் செய்ததை டிரம்ப் வெளிப்படையாகச் செய்கிறார், அவ்வளவுதான்."

எனவே அவர்களைப் பொறுத்தவரை, இதில் எந்தத் தார்மீக வேறுபாடும் இல்லை, நீ,  நாம் மனம் மருகலாம், ஆனால் மக்களை பொறுத்தவரை “பாணியில்” மட்டுமே வித்தியாசம் உள்ளது. இது 'மறைமுக ஊழல்' மற்றும் 'சுத்தமான நிர்வாகம்' இடையிலான பிரட்சனை  அல்ல….  மாறாக 'மறைக்கப்பட்ட' மற்றும் 'வெளிப்படையான' ஊழலுக்கு இடையிலான வேறுபாடு மட்டுமே.

டிரம்ப் துல்லியமாக மக்களின் இந்த நம்பிக்கையின்மையைதான் அறுவடை செய்கிறார்.


இதில் அடுத்த லெவலில் மீடியாவையும் எடுத்துக்கொள் …  ஒவ்வொரு அதிபரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டேதான் வந்துள்ளனர், இல்லையா?. ஃபாக்ஸ் நியூஸ் ஒபாமாவை எல்லா விஷயங்களிலும்  தாக்கியது, அவர் செய்த எல்லாவற்றிலும் சந்தேகங்களை கிளப்பியது, விமர்சித்தது, அவர் ஒரு நிகழ்வுக்கு tan suit  அணிந்து வந்ததை கூட பெரும் கான்றவர்சியாக்கியது, அமெரிக்க அதிபர் என்ற பெயருக்கு இழுக்கு என்று விமர்சித்தது.  CNN அல்லது மற்ற மீடியாக்கள்  புஷ்ஷைத் தாக்கியது. இப்படி ஒவ்வொரு தரப்பும் மற்ற தரப்பின் மீதான சந்தேகத்தை தொடர்ந்து வளர்த்தன. அதை அவற்றின் கடமையாகவும் உருவகித்தோம்.  

எனவே காலம் முழுவதும் அரசியல்வாதிகள் மீதான சந்தேகமும், சதி கோட்பாடுகளும் எப்போதும் காற்றில் கலந்துதான் இருக்கிறது இல்லையா?. ஆதரவாளர்கள் இரு பகுதி, அந்த அந்த பகுதி  தங்கள் தரப்பிற்கு எது பொருந்துகிறதோ அதை மட்டுமே நம்பினர்.

அந்த வரலாற்றுப் பின்னணியில் இருந்து டிரம்ப் பயனடைவதை அணுகுகிறேன். “ஏற்கனவே அனைத்தும் ஊழல் நிறைந்தது” என்று சித்தரிக்கப்படும்போது, விதிமுறைகளை வெளிப்படையாக மீறுவது மக்களை அந்த அளவிற்கு அதிர்ச்சியடையச் செய்வதில்லை. இது  'சுமத்தப்பட்ட ஊழல்' மற்றும் 'வெளிப்படையான ஊழல்' இடையிலான கோடு மட்டுமே… மக்களின் மனதளவில் இரண்டுமே ஒன்றுதான். ஊழல் நடந்தது, ஊழல் நடக்கிறது. அவ்வளவுதான்.


இது கிட்டத்தட்ட ஒரு மதவாதிக்கும் நாத்திகவாதிக்கும் இடையிலான வேறுபாடாக சொல்லலுவோம் இல்லையா அது போல….. ஒரு மதவாதி 3780 கடவுள்களை நம்பவில்லை,  ஒன்றை மட்டும் நம்புகிறார். ஒரு நாத்திகவாதி மதவாதியைவிட கூடுதலாக ஒரு கடவுளை (3781)  நம்பவில்லை, அவ்வள்வுதான் வித்தியாசம்….. இந்த இடைவெளிதான் பெரியது என்றாலும், தர்க்கரீதியாக இது மிகச் சிறியது.

இது ஒரு பெரும் கவலை கொள்ளும் அளவுக்கு  பெரும் முறைகேட்டுமாற்றம் அல்ல, ஏற்கனவே அவர்கள் கருதிய ஒன்றில் விழுந்த இன்னும் ஒரு கூடுதல் அடி, அல்லது அவர்கள் நம்பிக்கைக்கு ஒரு கூடுதல் வெளிப்படை ஆதாரம் அவ்வளவுதான்.

Count The Moments
Count The Moments

Saturday, October 11, 2025

தஷ்வந்த்-சிறுமி - கொலை வழக்கு








இவ்வளவு பலவீனமான தஷ்வந்த்-சிறுமி வழக்கை எப்படி இவ்வளவு தூரம், உயர் நீதிமன்றம் வரை கொண்டு போனார்கள் என்பது வியப்பாக உள்ளது. மகிளா நீதிமன்றம், கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் வழக்கில் வெற்றி பெற்று இதை மரணதண்டனை வரை கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது, கொஞ்சம் பயமாகவும்...


இவ்வளவு வருடங்களில், பலமுறை செய்திகளில் இந்த வழக்கை படித்திருந்தாலும், "குற்றவாளி என்று போலீஸ் கைது செய்திருக்கிறது, தஷ்வந்தான் குற்றவாளி" என்றே நானும் நினைத்திருந்தேன். அதற்க்கு மேல் அதில் படித்தறிய என்றும் முயன்றதில்லை. சுப்ரீம் கோர்ட் தஷ்வந்த்தை விடுதலை செய்த பின்தான், கொஞ்சம் அதிர்ச்சியாகி, இது எப்படி சாத்தியம் என்று ஆராய்ந்தால், எல்லாம் தலைகீழாக இருக்கு, வழக்கில் அத்தனை ஓட்டைகள் அல்லது எல்லாமே ஓட்டைகள்தான்.

உண்மையில், தஷ்வந்த்க்கு தண்டனை கொடுக்க எந்த காரணமும் காவல் துறையிடம் இல்லை. அந்த பையன் நிரபராதி என்று நான் சொல்லவில்லை. அது என் அறிதலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் அந்த பையனை தண்டிக்க எந்த வலுவான காரணமும் இல்லை அல்லது அவனை விடுவிக்க எல்லா காரணமும் நீதிமன்றத்துக்கு உண்டு.

எனக்கு சில நிலைப்பாடுகள் வரிசை உண்டு, "Conflicted Convictions". அதில் நிலைப்பாடு உண்டு, ஆனால் "இதுதான் சரி அல்லது தவறு" என்று உறுதியுடன் எங்கும் ஒரு விவாதமாக முன்னெடுக்க மாட்டேன். ஏனெனில் எனது நிலைப்பாடு சரி என்று எனக்கு தெரியும், ஆனால் அதற்கான எதிர் தர்க்கத்துக்கு என்னிடம் சரியான பதில் தர்க்கம் இல்லை.

என்கவுண்டர் கூடாது, மரணதண்டனை கூடாது, கருத்து சுதந்திரம் என்பது "எதை வேண்டுமானாலும் பேசலாம்" எனும் உரிமை அல்ல போன்றவை அவற்றில் சில. என் மனதுக்கு நெருங்கிய நண்பர்கள் இதில் மாற்று நிலைப்பாடை உறுதியுடன் முன்வைந்தால், ஏன் அவர்கள் தவறு என்று சொல்லுவேன், அது இதன் இன்னொரு தர்க்கத்தை கணக்கில் கொள்ள கோரும் ஒரு கோரிக்கை மட்டுமே.

ஹைதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 'Square Circle Clinic', (முன்பு Project 39A என்ற பெயரில் இருந்தது) மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்டப் பாதுகாப்பு வழங்கி, சமூக நீதி நிலைநாட்ட உதவும், சட்டம் படிக்கும் மாணவர்கள் உள்ளடக்கிய (Pro-bono Defence) அமைப்பு இந்த தஸ்வந்த் வழக்கையும் எடுத்து, நடத்தி அவனுக்கு இந்த விடுதலை வாங்கி கொடுத்திருக்கிறது. கடந்த 10 வருடங்களில் இந்த அமைப்பு மரணதண்டனை கொடுக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்திருக்கிறது. சட்ட உதவிகளுக்காகக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன் இந்தத் தன்னார்வச் சட்ட அமைப்பு செயல்படுகிறது.

தஷ்வந்த்-சிறுமி வழக்கு போன்று மிக வலுவற்ற வழக்குகளில் கூட காவல்துறையால் மரணதண்டனை வாங்கி கொடுக்க முடிகிறது என்பது மிக அபாயகரமான ஒரு சூழலை சுட்டி காட்டுகிறது, a stark reminder of how our criminal justice system operates.

இது சமூகத்தில் உணர்ச்சியை/கோபத்தை கிளப்பிய முக்கியமான வழக்கு. ஆனால் அதுவேதான் போலீஸ்க்கான அழுத்தமாக இருந்திருகிறது. "சிறுமி " "பாலியல் வல்லுறவு என்று சொல்லப்பட்ட்து" "எரித்துக்கொலை" என்ற இந்த மெல்லுணர்வுகள் மக்களிடம் எழுப்பிய உணர்ச்சிகளுக்கு உடனடி வடிகால் கொடுக்க வேண்டிய கட்டாயம் மட்டுமே காவல்துறை இந்த வழக்கை தேவையான எல்லா முறைகேடுகளையும் (sic) செய்து இந்த வழக்கை இந்த கோணத்தில் மட்டுமே நகர்த்தியதற்கான காரணமாக நம்புகிறேன்.

மரணதண்டனை ஏன் கூடாது என்பதற்கு இந்த வழக்கு இன்னும் வலு சேர்க்கிறது.


COMMENTS

Saravanan Vivekanandan replied to Aishu Shamna's comment.

@Aishu Shamna From a legal standpoint, the justice system relies on evidence, investigation and due process…. if none exist, there can be no conviction. Should not be...

undetected crime is unpunished because the system can not act without proof. Justice requires both a crime and the ability to prove it. A perfect crime should let the 'charged' to walk free.

Saravanan Vivekanandan replied to Christina Joseph's comment.

@Christina Joseph I feel, there can be only one reason why the police handled this case the way they did, to channel the public outrage stirred by the words “child,” “sexual assault,” and “burnt to death.”

The investigation was driven not by evidence, but by the pressure to give people an outlet for their emotions.

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

@Tony Immanuvel அவற்றை எல்லாம் எழுதினால் மிக நீண்ட பதிவாக சென்றுவிடுமே என்று யோசித்தேன். சில பதிவுகள் பார்த்தேன், செய்திகளை பார்த்து தஸ்வந்த் குற்றவாளி என்று முடிவு செய்து, பின் சுப்ரீம் கோர்ட் விடுதலை என்றவுடன் பொங்கிய பதிவுகள். எனவே அவர்களுக்கு பதிலாக இதை எழுதினேன் .

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

In this case, the timeline made no sense, suggesting that within barely an hour, Dashwanth managed to
•⁠ ⁠commit rape,
•⁠ ⁠⁠a murder,
•⁠ ⁠⁠walked all the way to petrol station, purchased 2 bottles of petrol,
•⁠ ⁠⁠burn the body
•⁠ ⁠⁠dispose the body
everything within an hour…

leave the court, any sane person accept that all could happen within an hour?

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

Even more questionable is the forensic evidence. The undergarment containing semen traces, supposedly key to the DNA match, wasn’t even mentioned in the initial crime scene records. The court has aaaallll the right to suspect that it might have been introduced later. It’s impossible to believe that the police would simply “forget” to include such critical evidence.

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

the victim’s body was burnt beyond recognition, and scientifically — any biological sample would be completely denatured by heat.

BUT, the police “later” claimed that a cloth with intact semen traces was recovered from undergarment …. so it was not in initial report but later…. which defies both forensic science and basic common sense….

So Initially, no undergarment was recorded in the FIR

Days later, such an item “appeared” in the forensic evidence list, submitted by police

The DNA analysis report then claimed a match between that semen sample taken from charged

சம்பவ இடத்தில் பொருட்களை கைப்பற்றியவுடன் சாட்சிகள் முன்னிலையில் அவை சீல் வைக்கப்பட்ட வில்லை. மேலும் கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட்து என்பதற்க்கோ, யார் பாதுகாப்பில் இருந்தது, யார் அந்த பொருட்களை தடய அறிவியல் அலுவலகத்திற்கு ஒப்படைத்தார்கள் என்பதற்கு எந்த சாட்சி, ஆவணம் எதுவும் இல்லை.

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

இதில் போலீசின் சில காமெடிகள்… CCTV, அதில் தஸ்வந்த ஒரு பையை எடுத்து செல்கிறான், பார்த்தால் “பாடியை டிஸ்போஸ் பண்ணி இருக்கிறான்” என்பது போலீஸ் தரப்பு வாதம் .

சரி, அந்த வீடியோ எங்கே என்றால் , ஒரு சாட்சியை கொண்டுவந்து போலீஸ் நிப்பாட்டி இருக்கிறார்கள் ... அந்த ஆள் CCTV க்கு சாட்சி. அதாவது போலீஸ் CCTV வீடியோவை பார்த்தார்கள் என்பதற்கு அந்த ஆள் சாட்சி, ஆனால் CCTV footage போலீசிடம் இல்லை . கோர்ட்டிலும் அதை சபமிட பண்ணவில்லை. அதை ரெக்கவர் பண்ணவே இல்லையாம். ஒரு வழக்கில் முக்கியமான CCTV footage என்பது எவ்வளவு முக்கியமான ஆதாரம், ஆனால் அதை கைப்படுத்தவே இல்லை என்பது நம்ப தகுந்தது இல்லை.

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

இந்த சம்பவத்தில் ஐ விட்னேஸ் இல்லை என்பது மிகப்பெரும் பலவீனம்.

சரி, ஆனால் சம்பவம் நடந்த நாளில் சிறுமியை கடைசியாக பார்த்த சாட்சின்னு ஒருத்தனை போலீஸ் அரசு தரப்பபில் நிப்பாட்டி இருக்காங்க. அவர் தஷ்வந்துடன் சிறுமி விளையாடுவதை தான் கண்டதாக. தொலைந்துபோகும் முன்.

குறுக்கு விசாரணை செய்யும்போது இவரும் சேர்ந்து குழந்தை காணோம் என்று தேடியதாக சொல்லி இருக்கிறார். ஆனால் குழந்தையை தான் அன்று தஷ்வந்துடன் பார்த்ததாக் குழந்தை அப்பா அம்மாவிடமோ அல்லது குழந்தையை அப்போது தேடியவர்கள் யாரிடமோ இவர் சொல்லவேயில்லை.

குழந்தை தஷ்வந்துடன் இருந்ததை பார்த்திருந்தால், குழந்த காணோம் என்று தேடும் நிகழ்வில் இதை கண்டிப்பாக மற்றவர்களிடம் சொல்லி இருப்பார். இவர்களும் தஷ்வந்த வீட்டில் தேடி இருப்பார்கள், அவனை விசாரித்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை. அவன் பார்த்தான் என்பது போலீஸ் ரெக்கார்டில் மட்டுமே இருந்திருக்கிறது .

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

The another thing court pointed out was Conviction and sentencing on the same day

It looks, in criminal trial, FIRST, The court declares that the accused is guilty beyond reasonable doubt based on evidence it seems, THEN, The defense is given a chance to argue his case on the basis of age, mental state, background, remorse, lack of prior record, or possibility of reform like all the “merits” on his side before the court decides the punishment

So it is two seperate events supposed to be… But in his case both happend in the same day it seems… Supreme court also question this

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

தஸ்வந்துக்கு எதிரா இருப்பது ஒன்றே ஒன்னுதான், அந்த CCTV யில் அவன் ஒரு பையை கொண்டுசெல்வது. அது குழந்தையுடைய பாடி என்பது போலீஸ் கிளைம் செய்வது , ஆனால் அந்த சிசிடிவியும் போலீசிடம் இல்லை (என்று சொல்லப்பட்டிருக்கிறது). பின் எப்படி அது தஸ்வந்த் என்று உறுதி செய்திருப்பார்கள் ? உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, பின் எப்படி செமன் எடுக்கப்பட்டது என்பது சார்ந்த தகவல் இல்லை. செமன் உள்ள ஆதாரம் FIR ரிலும் இடம் பெறவில்லை. யார் கிரைம்சீன் எவிடன்சை கலெக்ட் செய்தார்கள், எப்படி அது பாதுகாப்பாக வைக்கப்பட்டது , யார்பொறுப்பில் வைக்கப்பட்ட்து , என்ற எந்த தகவலும் இல்லை. எவிடென்ஸ் சீல் பண்ணப்படவும் இல்லை .

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

தஸ்வந்தை கைது செய்து அழைத்து சென்று அவனிடம் விசாரித்து அவனிடம் இருந்து குழந்தையை என்ன பண்ணினான் , எங்கே எரித்தான், எங்கே டிஸ்போஸ் பண்ணினான் என்று விசாரித்து பின் "தெரிந்துகொண்டு" வாக்குமூலம் வாங்கிய ரெக்கார்ட் தேதி, நேரம் வரையில் இருக்கு. ஆனால் குறுக்கு விசாரணையில் இது எல்லாவற்றையும் போலீஸ் முன்பே குழந்தையின் அப்பாவிடம் தெரிவித்திருக்கிறார்கள் . அது குழந்தை அப்பாவிற்கு முன்பே இது போலீஸ் மூலம் தெரிந்திருக்கிறது. நீதிமன்றம், காவல்துறையினர் முதலில் ஒரு கதையை முழுவதுமாகத் தயார் செய்துவிட்டனர். அதன் பிறகு, தஷ்வந்தைக் குற்றவாளியாகக் காட்டுவதற்காக, அந்தக் கதைக்கு ஏற்றபடி நிகழ்வுகளை அமைத்து, கோர்க்க முயன்றுள்ளனர் என்று கோர்ட் சொல்லி இருக்கிறது.

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

பிப்ரவரியில் தஸ்வந் கைது செய்யப்பட்டிருக்கிறான், தடயங்கள் கலெக்ட்செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் செமன் உள்ள குழந்தை உள்ளாடை ஃபாரன்சிக் அலுவலகத்துக்கு கொடுக்கப்பட்ட்து இரண்டுமாதம் கழித்து ஏப்ரலில். அடுத்து இன்னும் இரண்டுமாதம் கழித்து, ஜூன் மாதம்தான் தஸ்வந் இரத்தம் எடுக்கப்பட்டு DNA பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது . இந்த 4 மாதங்கள் காலதாமதம் என்பது இந்த தடயங்களை உருவாக்குவதற்கு அல்லது முறைகேடு செய்வதற்கு தேவைப்படும் காலதாமதம் என்று கோர்ட் நம்ப எல்லா உரிமையும் உள்ளது . ஏனெனில் chain of custody என்று சொல்லப்படும் இந்த தயடங்களை யார் எடுத்தார்கள் , யார் பாதுகாத்தார்கள் , யார் பொறுப்பில் இருந்தது , யார் தடயவியல் ஆய்வுக்கு கொண்டு சென்றார்கள் என்று எந்த தகவல் ஆவணமும் இல்லை .

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

The Supreme Court slammed both the trial court and the Madras High Court for ignoring major gaps in the prosecution’s case. It said Dashwanth was denied a fair trial at several stages.

He was arrested in February,2017. The chargesheet was filed in August and charges framed in October. But, a lawyer was appointed for him only in December — just days before witness examinations began.

The court then rushed through 30 witnesses in four days, leaving Dashwanth without proper legal representation.

The trial court convicted him and sentenced him to death on the same day — a clear violation of established legal procedure.

Saravanan Vivekanandan replied to Tony Immanuvel's comment.

இதில் போலீஸ் இந்த கேசை சீரியசாக விசாரணை பண்ணவில்லை என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இது சமூகத்தில் உணர்சியை/கோபத்தை கிளப்பிய முக்கியமான வழக்கு. ஆனால் அதுவேதான் போலீஸ்க்கான அழுத்தமாக இருந்திருகிறது. "சிறுமி " "பாலியல் வல்லுறவு என்று சொல்லப்பட்ட்து" "எரித்துக்கொலை" என்ற இந்த மெல்லுணர்வுகள் மக்களிடம் எழுப்பிய உணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுக்க வேண்டிய காவல்துறையின் அழுத்தம் மட்டுமே.

யாரையாவது பிடித்து உள்ளேவைத்து மக்களின் எதிர்ப்பை குறைப்பது… விசாரணை கிட்டத்தட்ட 10 மாதங்கள் நடந்திருக்கிறது. இந்த 10 மாதங்களில் வேறு யாரோ ஒருவர் ஆதாரங்களுடன் கிடைத்திருந்தால் கேசை அப்படி கொண்டு போயிருப்பார்கள் ஆனால் அப்படி கிடைக்கவில்லை என்ற உடன் இதில் ஜோடித்தல், data clencing எல்லாம் ப்ண்ணி இருக்கிறார்கள்

இந்த சிசிடிவி பாயிண்டை எடுத்துக்கொண்டாலும், அந்த சிசிடிவி ஃபுட்டேஜை போலீஸ் ரெகவர் பண்ணவில்லை என்று நான் நம்பவில்லை. அந்த அளவுக்கு, ஒரு எவிடென்ஸை ரெகவர் பண்ணனும் என்று தெரியாமலோ, அலட்சியமாகவோ போலீஸ் இருந்திருக்க மாட்டார்கள், ஏனெனில் இது ரொம்ப பேசிக். ஆனால் அந்த cctv அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதைவிட அவனை விடுவிக்க கோர்ட்டுக்கு ஒரு ஆதாரமாக திசை திரும்பிவிடும் என்று அதை கோர்ட்டில் ஒப்படைக்காமல் இருந்திருப்பார்கள், its intentionally removing unfavorable data to influence outcomes.

Saravanan Vivekanandan replied to Revathi R's comment.

Revathi R ஆம் , நீங்கள் சொல்வது ஒரு பாயிண்ட் /ஒருவேளை சாட்சியங்கள் இல்லாவிட்டாலும் அவன் உண்மை குற்றவாளி எனில் / என்பது . இன்னொரு பாயிண்ட், போலீஸ் குற்றவாளி என்று அப்படி இல்லாத ஒருவனை பிடிக்கிறது எனில் , அப்போது உண்மை குற்றவாளியை அதே சமூகத்தில் இன்னும் நடமாடவிடும் ஆபத்தையும் செய்கிறது.

ஒருவேளை தஸ்வந்த் குற்றவாளி இல்லை என்றால், கொலை செய்தது யார்? அவன் இன்னும் அங்கேதானே இருக்கிறான்? ஆனால் அவனை தேடும் கடமை, அழுத்தம் இந்த போலி கைதால் போலீசுக்கு இல்லாமல் போகிறது என்பது இன்னும் அபாயமான ஒன்று.

Saravanan Vivekanandan replied to Gangai Arasan's comment.

Gangai Arasan ஹைதராபாத்தில் NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் 'Square Circle Clinic' என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி அளிக்கும் ஒரு அமைப்பு. மரண தண்டனை வழங்கப்பட்டவர்களுக்குச் சட்ட ரீதியான உதவிகள், ஆலோசனைகள் வழங்குதல், மற்றும் நீதிமன்றத்தில் அவர்களின் வழக்குகளை எடுத்து நடத்துதல் போன்ற முக்கியப் பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. சட்ட உதவிகளுக்காகக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன் இந்தத் தன்னார்வச் சட்ட அமைப்பு செயல்படுகிறது. இது சட்டம் படிக்கும் மாணவர்களை உள்ளடக்கிய அமைப்பு.

Saravanan Vivekanandan replied to Vidya Anand's comment.

Vidya Anand Dhasvanth was acquitted in that case too 6 months ago. His father, the main witness, backed out during questioning and denied saying Dhasvanth asked his mom for Rs. 20,000 before she died. This ruined the prosecution's story about motive and Dhasvanth's role in the murder.

There was no solid proof, like forensics or direct evidence, tying him to the crime scene, the head injury or the stolen jewelry. A simple family dispute wasn't enough to convict him. Without witnesses or material evidence, the case seemed made up, pushed by public anger after his bail rather than actual facts.

Saravanan Vivekanandan replied to Karthick Madhavan's comment.

Karthick Madhavan Dhasvanth was acquitted in that case too 6 months ago. His father, the main witness, backed out during questioning and denied saying Dhasvanth asked his mom for Rs. 20,000 before she died. This ruined the prosecution's story about motive and Dhasvanth's role in the murder.

There was no proof, like forensics or direct evidence to claim Dhasvanth's presence at the crime scene or involvement in the head injury death and jewelry theft . A simple family dispute wasn't enough to convict him. Without witnesses or material evidence, the case seemed made up, pushed by public anger after his bail rather than actual facts.

Saravanan Vivekanandan commented on their own photo.

PriyaDarshni Darshni You’re absolutely right. From what I’ve seen over the years, people don’t really "process information" they simply "inherit opinions". It’s easier and more comfortable that way. Once a narrative aligns with their sense of outrage or morality, they hold on tightly to it endlessly. It’s no longer about seeking truth or facts, in fact, I’ve started to believe many are afraid of facts, afraid that evidence might challenge what they’ve already decided to believe. Even if the Supreme Court itself contradicts their belief, they won’t pause for a moment and reconsider. They’d rather preserve their emotional comfort than face cognitive discomfort. As you said, 99% of people, still going to "believe" Dhaswanth is guilty, thats how our society values the illusion of certainty over the effort of understanding.

Saravanan Vivekanandan replied to Suresh Yaluma's comment.

Suresh Yaluma That’s the real horror of a false conviction , when the investigation becomes so fixated on proving Dhaswanth guilty that they stop looking beyond him. The real criminal likely vanished into the crowd long ago, erasing every trace of evidence and living freely ever since. Now, years later, if the police were to reopen the case, they’d have to start from scratch, only to eventually close it as another “unsolved case.”☹️

Saravanan Vivekanandan replied to Seetharaman Kalyan's comment.

Seetharaman Kalyan Dhasvanth was acquitted in that case 6 months ago. His father, the main witness, backed out during questioning and denied saying Dhasvanth asked his mom for Rs. 20,000 before she died. This ruined the prosecution's story about motive and Dhasvanth's role in the murder.

There was no proof, like forensics or direct evidence to claim Dhasvanth's presence at the crime scene or involvement in the head injury death and jewelry theft . A simple family dispute wasn't enough to convict him. Without witnesses or material evidence, the case seemed made up, pushed by public anger after his bail rather than actual facts.

Saravanan Vivekanandan commented on Dinesh Rajeshwari's photo.

எல்லா இடங்களிலும் போலீஸ், தமிழக கீழ் நீதிமன்றங்கள், தமிழக பத்திரிகைகள் , தமிழக மரணதண்டனை எதிர்ப்பு குழுக்கள், தமிழக மக்கள் செண்டிமெண்ட் என எல்லாம் போலீஸ் அதற்க்கு முன் பத்திரிக்கைகள் வழி உருவாக்கி இருந்த நேரட்டிவிற்கு ஆதரவாக தஷ்வந்துக்கு எதிராகவே இருந்திருக்கின்றன. அதனால்தான் அவனுக்கான குறைந்தபட்ச் உரிமையான சடட ஆலோசனை வழங்க ஒரு வக்கீலை அரசு அமைத்து கொடுக்கவேண்டும் என்பது கூட முதல் 10 மாதங்கள் நிறைவேற்றப்படவில்லை. அவனுக்கான வக்கீலே இல்லாமல் அவனுக்கு எதிரான எல்லா விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு, குற்றங்கள் ஃபிரேம் பண்ணப்பட்டிருக்கிறது .

வழக்கு கோர்டில் விசாரணை வரும் 5 நாள் முன்புதான் அவனுக்கான வக்கீல் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே இந்த வழக்கு கீழ்நீதிமன்றங்களில் இருந்து உயர்நீதி மன்றம் வரை வெற்றி பெற்றிருக்கிறது .

முதன் முதலில் இந்த தமிழக சூழலில் இருந்து கேஸ் வெளியே போய், தமிழகத்துக்கு வெளியே இருந்து ஒரு பார்வை பட்டதோ.... ஹைட்ராபாத் சட்ட யுனிவர்சிட்டி மற்றும் சுப்ரீம் கோர்ட் , அப்போதுதான் எல்லா தவறுகளும் வெளிவந்திருக்கிறது . அதுவரை இங்கு இருந்த யாருக்கும் இந்த வழக்கு சார்ந்த நுண் தகவல்கள் எதுவும் தெரியவில்லை . எல்லோரும் தஸ்வந்தான் குற்றவாளி என்று நினைத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்

Count The Moments
Count The Moments

Friday, June 20, 2025

கருப்பு பணம் பிரட்ச்சனை - ஸ்விஸ் பேங்க்














அது 2011ம் வருடம், கருப்பு பணம் பிரட்ச்சனை கொழுந்துவிட்டெரியும் ஒரு தீவிரமான பிரச்சனையாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முக்கியமாக ஸ்விஸ் பேங்கில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம்.

ஸ்விஸ் பேங்கில் வைத்திருக்கும் பணம் மிக ரகசியமானது, அது அவர்களது ஆர்டிகிள் 47 ல் பாதுகாக்கப்பட்டது. எனவே அதை அந்த அரசாங்கமே மீறமுடியாது, எந்நிலையிலும் அந்த ரகசியத்தை பாதுகாப்பார்கள். எனவே ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை பெறுவது எளிதல்ல. ஆனால் பிஜேபியின் பிரச்சாரத்தால் எழுந்த பிரச்சனையின் தீவிரத்தால் அப்போது இருந்த காங்கிரஸ் அரசு தனது தூதரக உறவு வழி நீண்டகாலம் போராடி, பெரும் முயற்சிக்கு பின் ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை பெற்றது. அவர்களது திட்டம், அந்த விவரங்களைக் கொண்டு அந்த குறிப்பிட்ட நபர்கள் சட்டத்துக்கு புறம்பான தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்களா என்று அவர்களை கண்காணிப்பதும், அவர்களது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களுக்கான நடவடிக்கை, வருமானவரி வசூலித்தல் போன்றவற்றை செய்வது. ஆனால் எல்லாமே அரசு அமைப்புகளுக்குள் ரகசியமாக செய்ய முடியுமே தவிர பொதுவெளியில் ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் விபரங்களை வெளியிட முடியாது, அந்த ஒப்பந்தத்தில்தான் ஸ்விஸ் நாட்டிடம் இருந்து இந்த விவரங்கள் பெறப்பட்டன. ஒரு நாடாக இந்தியா அந்த ஒப்பந்தத்தை மீற முடியாது.



ஆனால் இதை வைத்து பிஜேபி எப்படி அரசியல் செய்ய முடியும்??? எனவே ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் தகவல்களை பொதுவில் வெளியிட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது. தகவல்கள் சார்ந்த நடவடிக்கையைவிட அந்த அறிக்கையை பொதுவில் வெளியிட வேண்டும் என்பதில் அரசை நெருங்கியது. அந்த பணம் எல்லாம் ஊழல் செய்த பணம், அவர்கள் தகவல்களை வெளியிடாததன் மூலம் ஊழல்வாதிகளை அரசு பாதுகாக்கிறது என்று தீவிரமாக பிரச்சாரம் செய்தது. போராட்டம் நடத்தினார்கள். நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் முடக்கினார்கள். கட்சி ஆதரவாளர்கள் வழக்கம் போல் வாட்ஸப்பில் எதிர்க்கட்சி பெருந்தலைகள் பெயரெல்லாம் போட்ட டாக்குமென்ட்களை போட்டோஷாப் செய்து, தமக்கு விருப்பமான எண்களை போட்டு பரப்பினார்கள். குழுக்களில் தேசபக்தி மிளிர விவாதித்தார்கள். ஆனால் எதிர்க்கடசி அரசின் எந்த சமரசத்துக்கும் செவிசாய்க்கவில்லை. பிரணாப் முகர்ஜி எதிர்க்கட்சி தலைவர்களுடன் மதிய உணவு பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தியும் எந்த சமரசமும் ஏற்படவில்லை.

அந்த பாராளுமன்ற தேர்தலில் அது ஒரு பெரும் பிரச்சாரமாக இருந்தது. கருப்பு பணத்திற்கு எதிரான இந்தியர்களின் உணர்ச்சி, அதை செய்த ஊழல் பேர்வழிகளை, குற்றவாளிகளின் பெயரை வெளியில் சொல்லாமல் "காப்பாற்றும்" காங்கிரஸ் மீது திருப்பப்பட்டது. அந்த பணத்தை இந்தியா கொண்டுவந்தால் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடலாம் என்று ஆசைவார்தைகள் மூலம்தான் மோடி ஆட்சிக்கே வந்தார், (இன்றும் 15 லட்சம் அவரை துரத்திக்கிட்டு இருக்கு)

ம்ம்ம்ம்ம்.... எல்லாம் முடிஞ்சிடுச்சு, ஆட்சிக்கு வந்தாச்சு ....

2013 - "India vows tough punishments, including jail terms of up to 10 years for those who hide undeclared cash outside the country." - Arun Jaitley, Finance Minister, Parliament.

2017 - ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் 50% அதிகரிப்பு 3 ஆண்டுகளில் முதல்முறையாக உயர்வு -செய்தி

2018 - "Stupid To Presume That All Swiss Money Is Black": Arun Jaitley (அஃப் கோர்ஸ், அப்படி presume பண்ணி உங்களுக்கு ஓட்டு போட்டவர்களை நீங்கள் முட்டாள்கள் என்றே சொல்லலாம், ஒன்னும் தப்பில்லை😃)

2019 - The Union Finance Ministry has refused to reveal the Swiss bank accounts details of Indians saying it is covered under “confidentiality provisions” of a tax treaty signed between India and Switzerland - News

2019- why it’s being assumed all the money in Swiss banks is illegal -Finance Minister, Piyush Goyal.

2021 - ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் மேலும் 50% அதிகரிப்பு, 14 வருட உச்சம்- செய்தி

2022- சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல. -நிர்மலா சீத்தாராமன், நிதியமைச்சர்.

2024 - சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ஒரே வருடத்தில் மூன்று மடங்காக உயர்வு. Indian Money In Swiss Banks Tripled In 2024 To Nearly ₹37,600 Crore, Highest Since 2021





“This is sheer hypocrisy and dishonesty with the public of India and at least you should have the courage to tell the public that reality in governance is different from rhetoric from the pulpit when you seek to mislead the people to get votes," - Abhishek Manu Singhvi, Congress spokesperson.

Count The Moments
Count The Moments